கவிதைமணி

என் ஓட்டம்  என் இலக்கு :  கோ. மன்றவாணன்

கவிதைமணி

எட்டிப் பறிக்கும் தூரத்தில்
இருக்கும்
திராட்சைக் குலைகள் அல்ல ;
நட்சத்திரங்கள்.

கண்மூடி நின்று
கைநீட்டினால் கிடைக்கும்
வித்தைப் பொருளல்ல ;
நெற்றிவியர்வை சிந்தி
நெற்பயிர் விளைவித்தல்.
கணுக்கால் நதியில் நடந்து
கரைசேர்வதல்ல
இலட்சியம் ;

மூழ்கடிக்கும்
நெருப்பாற்றில்
நீந்திக் கடப்பதே சாதனை.
தூரத்தில் இருந்து அழைக்கிறது
சொர்க்க வனம்

இடையில்
அகழிகளைத் தாண்டி ஓட வேண்டும்
நெடிதுயர்ந்து தடுக்கும்
மலைகளில் ஏறிச்சென்றும்
துளைத்துச் சென்றும் ஓட வேண்டும்
ஆங்காங்கே
ஆளை விழுங்கும் புதைகுழிகளில் விழாமல்
வேண்டும்

என் ஓட்டம்
நிற்காது
இலக்கை அடையும் வரை

வெற்றி மேடையில் மட்டுமே
சற்றே இளைப்பாறும்
என் கால்கள்

அதன்பின்னும் விடாது என்னை
அடுத்த இலக்கு
அடுத்த ஓட்டம்

ஓடிக்கொண்டே இருப்பதுதான்  
வாழ்க்கை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

ஏழுமலையான் தரிசனம்: 16 மணிநேரம் காத்திருப்பு!

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

SCROLL FOR NEXT